Juli 2, 2024

கடலில் மிதந்து வந்த போத்தலில் காணப்பட்ட திரவத்தை அருந்திய 4 கடற்தொழிலாளர்கள் உயிரிழப்பு

Message in a bottle floating on the ocean waves. Calling for help.

கடலில் மிதந்துவந்த போத்தலில் இருந்த திரவத்தை அருந்திய தங்காலை பகுதியை சேர்ந்த நான்கு கடற்தொழிலாளர்கள் உயிரிழந்துள்ள நிலையில் இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் , வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தங்காலை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து படகில் கடற்தொழிலுக்கு நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு சென்ற 06 கடற்தொழிலாளர்கள் கடற்பரப்பில் கண்டெடுத்த திரவத்தை அருந்திய நிலையில், மூவர் படகில் உயிரிழந்துள்ளனர். 

சம்பவம் தொடர்பில் கரையில் உள்ளவர்களுக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , கடற்படையினர் மற்றும் சக கடற்தொழிலாளர்கள் கடலுக்குள் சென்று மீனவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்ததுடன்  படகினையும் கரை சேர்ந்தனர் 

மூவர் கடலிலையே உயிரிழந்த நிலையில் , மூவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

ஏனைய இருவரும் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert