அதானிக்கு இலங்கை அரசின் பரிசு!

இந்தியா வெளியுறவு அமைச்சர் இலங்கை வருகை தரவுள்ள நிலையில் இலங்கை அரசு அதானி நிறுவனத்திற்கு புதிய பரிசை அறிவித்துள்ளது.

 இந்தியாவின் அதானி நிறுவனத்தால் தமிழர் தாயகப்பகுதியில் நிறுவப்பட இருந்த காற்றாலை மின் திட்டத்திற்கு அனுமதி வழங்க முடியாது என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மன்னார் – பூநகரி ஆகிய இரண்டு இடங்களில் இரண்டு பாரிய காற்றாலை மின்னுற்பத்தி திட்டங்கள் அமைக்கப்பட இருந்தன.

இந்த நிலையிலேயே குறித்த மின்னுற்பத்தி திட்டங்களுக்கு தற்போது அனுமதி வழங்க முடியாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இந்த திட்டத்திற்கான மதிப்பீடு மற்றும் அவற்றின் ஊடாக சூழலுக்கு ஏற்படக் கூடிய தாக்கம் தொடர்பில் மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் வழங்கப்பட்ட உரிமத்தின் விபரங்கள் உள்ளிட்டவற்றின் மேலதிகத் தகவல்களை சமர்ப்பிக்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த மின்னுற்பத்தி திட்டங்களுக்கு இலங்கை முதலீட்டுச் சபை கடந்த பெப்ரவரி 23ஆம் திகதி அனுமதி கடிதத்தை வழங்கியிருந்தது.

இந்த திட்டமானது 442 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டுடன் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், இதனூடாக 350 மெகாவோட் மின்சாரம் தேசிய மின்கட்டமைப்பில் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் பூநகரி மற்றும் மன்னார் காற்றாலை மின்னுற்பத்தி திட்டங்களுக்கு அனுமதி வழங்குவதற்கு மேலும் பல தகவல்கள் அவசியமாக உள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert