April 30, 2024

விடுதலைப் புலிகள் அமைப்பினரை நினைவு கூருவதில் என்ன தவறு? ராஜபக்சர்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

விடுதலைப் புலிகள் அமைப்பினரை நினைவு கூருவதில் என்ன தவறு? ராஜபக்சர்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஆட்சியின் போது எவ்வாறு நினைவேந்தல்களை நடத்த அனுமதி வழங்கப்பட்டதோ அதேபோன்று ராஜபக்ஸ ஆட்சியிலும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் இவ்வாறு கூறியுள்ளார்.

ஜே.வி.பியின் போராளிகளை நினைவுக் கூர அனுமதி வழங்கப்படுமாயின், உரிமைக்காக போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினரை நினைவுக் கூருவதில் என்ன தவறு இருக்கின்றது என கேள்வி எழுப்பியுள்ளார்.