Mai 4, 2024

சிறுமிகளை இந்தியாவுக்கும் மலேசியாவிற்கும் விற்ற டக்கி- அமெரிக்க அறிக்கை வெளியானது

தற்போதைய இலங்கை அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா, 2007ம் ஆண்டு போரினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களையும் சிறுமிகளையும் இந்தியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளுக்கு விற்றார் என்று அமெரிக்க அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. போரினால் பாதிக்கப்பட்டு, தாய் தந்தையரை இழந்த சிறுவர்களை வீட்டு வேலை செய்யும் நபராகவும். சிறுமிகளை பாலியல் தொழிலுக்கும் வெளிநாடுகளுக்கு விற்றுள்ளார் டக்கி.

இந்த தகவலை 2007ம் ஆண்டு உறுதி செய்து, கொழும்புல் உள்ள அமெரிக்க தூதுவர் ரொபேட் ஓ பிளக் அவர்கள் தனது தலைமையகமான வாஷிங்டனுக்கு அனுப்பியுள்ளார். இந்த பாதுகாப்பான பரிமாற்றத்தை, விக்கி லீக்ஸ் தற்போது வெளியிட்டுள்ளது.