Mai 1, 2024

துயர் பகிர்தல் பத்தக்குட்டி கைலாசபிள்ளை

திரு. பத்தக்குட்டி கைலாசபிள்ளை

(இளைப்பாறிய பொறியியலாளர், இலங்கை நீர்ப்பாசன இலாகா)

தோற்றம்: 08 மார்ச் 1924 – மறைவு: 09 செப்டம்பர் 2020

சிட்னி அவுஸ்திரேலியாவில் வாழ்ந்தவரும் மட்டக்களப்பு மண்டூரை பிறப்பிடமாகவும், திருப்பழுகாமத்தை வதிவிடமாகவும்  கொண்டவருமான திரு பத்தக்குட்டி கைலாசபிள்ளை (இளைப்பாறிய பொறியியலாளர், இலங்கை நீர்ப்பாசன இலாகா)  இன்று 09/09/2020 சிட்னியில் காலமானார்.

இவர் திருப்பழுகாமத்தை  சேர்ந்த செல்வரெத்தினத்தின் அன்பு  கணவரும்,

காலம்சென்றவர்களான  பத்தக்குட்டி ( தலைமை ஆசிரியர் ), தெய்வானை ஆகியோரின் அருமை புதல்வனும்,

காலம்சென்றவர்களான தம்பாபிள்ளை, பொன்னம்மா ஆகியோரின் அன்பு மருமகனும்,

பிரபாகரன் (ஆஸ்திரேலியா), கெளசலா( ஐக்கிய  அமெரிக்கா), சகுந்தலா (ஆஸ்திரேலியா), சிவகலா (கனடா ) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலம்சென்றவர்களான  சிவசுப்ரமணியம் (இளைப்பாறிய பொறியியலாளர்), கணேசபிள்ளை, சந்திரசேகரம் ( பேராசிரியர்) ஆகியோரின் அருமை சகோதரனும்,

ஜெயலக்சுமி, ராஜேந்திரா, சந்திரகுமார், சதீஸ்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சத்துருக்கன், யதுர்சி, ஜனகன், ஆர்த்தி, பிரசாந்த் ,  சந்தியா, கவின், ஹரிணி ஆகியோரின் செல்ல பாட்டனும்,

அலானா, காவியா ஆகியோரின் பூட்டனும்  ஆவார். 

 
ஈமை கிரியைகள், தகனம்  பற்றிய தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
தகவல்களுக்கு :-
 
பிரபா : +61 422 478 835
 
கெளசி : +1 678 779 3744