Mai 7, 2024

பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த சாரதியின் குடும்பத்திற்கு ஒரு மில்லியன் நஷ்ட ஈடு

நாரம்மலையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த லொறி சாரதியின் உறவினர்களுக்கு பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஒரு மில்லியன் ரூபாவை நட்டஈடாக வழங்கியுள்ளார்.

இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் கான்ஸ்டபிள் ஆகியோர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

அத்துடன் நாரம்மல துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகரை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நேற்றைய தினம் நீதிமன்று உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert