Mai 10, 2024

நல்லூரில் அன்னை பூபதிக்கு அஞ்சலி

தமிழர்களுக்காக அகிம்சை வழியில் போராடி தன்னுயிரினை ஈகம் செய்த தியாகத்தாய் அன்னை பூபதி அம்மாவின் இறுதி நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் புதன்கிழமை  நல்லூரடியில் உள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில் நடைபெற்றது 

அன்னை ஈகைச் சாவினைத் தழுவிக்கொண்ட நேரமான 8.45 மணி முதல் தியாகத்தாயின் உருவப்படத்திற்கு பொதுமக்கள் மலரஞ்சலி  செலுத்தி வருகின்றனர். 

அதனைத் தொடர்ந்து இறுதி நினைவேந்தல் நிகழ்வு மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. இவ் நினைவேந்தலில் ஈகைச்சுடரினை தியாகத்தாய் அன்னை பூபதியின் பேத்தி ஏற்றிவைப்பார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert