Mai 10, 2024

அன்னை பூபதியின் 35 ஆம் ஆண்டின் எழுச்சி நிகழ்வுகள் தமிழர் தாயகம் எங்கும்சிறப்பாக நடைபெற்ற வண்ணம் உள்ளது.

னை பூபதி நினைவேந்தல் கட்டமைப்பின் ஏற்பாட்டில் அன்னையின் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றது.
கடந்த 15 4 2023 அன்று அன்னையின் சொந்த ஊரான கிரான் பகுதியில் ஆண்களுக்கான மென் பநது துடுப்பாட்டப் போட்டி நடைபெற்றது இதில் பல்வேறு துடுப்பாட்டு அணிகள் கலந்து கொண்டனர். இப் போட்டியின் ஆரம்ப நிகழ்வில், சமூக ஆர்வலர்கள், தேசப்பற்றாளர்கள் மற்றும் விளையாட்டு துறை அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தொடர்ந்து 17.04.2023 அன்று அன்னையின் நினைவு சுமந்து கரப்பந்தாட்ட போட்டி நடைபெற்றது இதன் ஆரம்ப நிகழ்வின் போது தியாக தீபம் அன்னை பூபதி அவர்களின் மகளார் திருமதி.சாந்தி அவர்களும் அன்னை பூபதி நினைவேந்தல் கட்டமைப்பின் உறுப்பினர் திரு.சபா.சிவயோகநாதன் ஆகியோர் கலந்துகொண்டு போட்டிகளை ஆரம்பித்து வைத்து சிறப்பித்தனர்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert