Mai 4, 2024

சுகாதார சேவைக்காக 38 மில்லியன் டொலர்களை வழங்கியது ஜப்பான் !

தடையற்ற அத்தியாவசிய மற்றும் சுகாதார சேவைக்காக 38 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு ஜப்பான் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இலங்கைக்கான ஜப்பானின் பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இந்த உதவி கிடைப்பதாக அவர் கூறியுள்ளார்.

சுகாதாரத் துறைக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த எரிபொருளை குறிப்பாக டீசல் கொள்வனவு செய்வதற்கு ஜப்பான் நிதி வழங்கவுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert