April 26, 2024

முடங்கியது வடமராட்சியில் தனியார் பேருந்து சேவைகள்!

கடந்த ஐந்து நாட்களாக பருத்தித்துறை சாலையிலிருந்து தனியார் பேருந்துகளுக்கு டீசல் வழங்காமையால், வடமராட்சியில் இன்று வியாழக்கிழமை (14) காலை முதல் தனியார் பேருந்து சேவை முற்றுமுழுதாக முடங்கியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தனியார் போக்குவரத்துச்  சேவைக்கு அந்தந்த சாலைகளிலிருந்து டீசல் வழங்கும் நடைமுறை  இருக்கின்ற போதும் பருத்தித்துறை சாலை முகாமையாளரால் கடந்த ஐந்து நாட்களாக டீசல் வழங்கப்படாமையாலேயே  பருத்தித்துறை யாழ்பாணம் மற்றும் கொடிகாமம் சேவைகள் முற்றிலும் முடங்கின.

இந்நிலையில், இன்றிலிருந்து பருத்தித்துறை சாலை முன்பாக தனியார் பேருந்துகளை நிறுத்தி பேருந்து உரிமையாளர்களும் நடத்துநர்களும் டீசல் பெறுவதற்காக காத்திருக்கின்றனர்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert