April 27, 2024

சிங்கப்பூருக்கு பறந்தார் கோட்டாபய: வெளியான தகவல்.

சிறிலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூருக்கு சென்றுள்ளதாக மாலைதீவு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மாலைதீவிலிருந்து கோட்டாபய இவ்வாறு சிங்கப்பூருக்கு புறப்பட்டுள்ளார்.

சவூதி விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் இவ்வாறு கோட்டாபய சிங்கப்பூர் புறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சவூதி அரேபிய விமான சேவையின் எஸ்.வீ. 788 விமானத்தில் பயணிப்பதாக மாலைதீவு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கோட்டாபய அவரது துணைவியார் மற்றும் இரண்டு பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் இந்த விமானத்தில் பயணிக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert