April 28, 2024

24 மணி நேரத்தில் மேலும் 511 காவலர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது!

24 மணி நேரத்தில் மேலும் 511 காவலர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது!

நாட்டிலேயே கொரோனா தொற்று பாதிப்பு மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் அதிக அளவு காணப்படுகிறது.

கொரோனா தொற்றுக்கு எதிராக களத்தில் முன்னின்று பணியாற்றும் காவல் துறையினரும் அங்கு அதிகமாக தொற்று பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில், மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 511 போலீசாருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,912 ஆக அதிகரித்துள்ளது.

இந்த ஆட்கொல்லி நோய்க்கு இன்று மேலும் 7 போலீசார் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 173 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் இதுவரை 13,719 காவலர்கள் கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது வரை 3,020 காவலர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.