April 27, 2024

சுமந்திரனை தொடர்ந்து பண நெருக்கடியில் அம்பிகாவும்?

ஐ.பி.சி தமிழ் நிறுவனத்திற்கு எதிரான சட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகஅறிவித்துள்ளார் சுமந்திரனின் அந்தரங்க தோழியும் இலங்கையின் முன்னாள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் அம்பிகா சற்குணநாதன்.
தனது  கூட்டாளி சுமந்திரனின் ஆலோசனைபடி சட்டத்தரணி லக்சிகா பக்மிவெவ ஊடாக, கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

ஐ.பி.சி தமிழ் நிறுவனத்தில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் தமது நற்பெயருக்கு தீங்கு மற்றும் அவதூறு விளைவிக்கும் முறையில் காட்சிப்படுத்தப்பட்டதாகவும், அந்த நிகழ்ச்சியில் பெண் வெறுப்பு தனம் காணப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஜூலை மாதம் ஒளிபரப்பான ரீக்கடை என்ற நிகழ்ச்சி தொடர்பாகவே அம்பிகா நட்டஈடு கோரியுள்ளதாக கருதப்படுகிறது.

5,000,000 ஸ்ரேலிங் பவுண் (12332,80,369 ரூபா) நட்டஈட்டையும், மன்னிப்பையும் IBC தமிழ் நிறுவனத்திடமிருந்து கோரியுள்ளார்