März 28, 2025

அடுக்குமாடித் தொடரில் தீ!! 46 பேர் பலி!!

தெற்கு தைவானில் 13 மாடித்  தொகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 46 பேர் பலியாகியுள்ளனர் மேலும் டஜன் கணக்கானோர் பலத்த காயமடைந்தனர்.

இன்று வியாழக்கிழமை அதிகாலை காவோஷியங் நகரில் உள்ள ஒரு குடியிருப்பு மற்றும் வணிகக் கட்டிடம் தீப்பிடித்து எரிந்ததாக உள்ளூர் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.

தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் நான்கு மணி நேரத்திற்கு மேல் போராடினர்.

தீயணைப்பு துறையினர் கூறுகையில், 79 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர், அவர்களில் 14 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் எனத் தெரிவித்தனர்.

தீ விபத்துக்கான காரணம் தெளிவாக இல்லை மற்றும் புலனாய்வாளர்கள் சம்பவ இடத்தில் உள்ளனர்.

ஏழாவது மற்றும் 11 வது மாடிக்கு இடையில், கட்டிடத்தின் குடியிருப்பு பகுதியில் மக்கள் சிக்கியிருக்கலாம் என்று அதிகாரிகள் எச்சரித்திருந்தனர்.