März 28, 2025

பண்ணைக் கடலில் வீழ்ந்தவரை கடல் இழுத்துச் சென்றது! தேடும் பணிகள் தீவிரம்!!

யாழ்ப்பாணம்,  தீவகம் வீதியில் பண்ணைப் பாலத்தில் இருந்து தவறி வீழ்ந்த ஒருவர் கடலில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். அவரை தேடும் பணியில்

கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.இந்தச் சம்பவம் இன்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றது. இரவு 7 மணி தாண்டியும் வீழ்ந்தவரைத் தேடும் பணிகள் தொடர்கின்றன.

ஆரம்ப விசாரணைகளில் கடலில் வீழ்ந்தவர் யாழ்ப்பாணம் தனியார் நட்சத்திர விடுதி ஒன்றில் பணியாற்றுபவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.