Mai 8, 2024

துயர் பகிர்தல் திருமதி தாமோதரம்பிள்ளை.கண்மணி

திருமதி தாமோதரம்பிள்ளை.கண்மணி ஆசிரியை அவர்கள் காலமானார்
யா /ஸ்ரீ சோமாஸ் கந்த கல்லூரியின் ஓய்வு பெற்ற ஆசிரியரும் புத்தூர் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை.கண்மணி ஆசிரியர் அவர்கள் 24/5/2021ம் திகதி இறைபதம் அடைந்த செய்தியைக் கேள்வியுற்று நாம் அனைவரும் ஆழ்ந்த துயரடைந்தோம்.
அமரர் அவர்கள் மாணவர்களின் ஆரம்பக்கல்வி அறிவை புகட்டுவதில் சிறந்து விளங்கியவர்.
தாய்க்குத்தாயாய், நல்லாசிரியராய் மாணவர்களின் உயர்நிலைக்கு வித்திட்டவர். அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் அவரது ஆத்மா சாந்தியடைய நாம் அனைவரும் சோமாஸ்கந்த பெருமானை பிரார்த்திப்போம்.
ஓம் சாந்தி!சாந்தி ! சாந்தி !