Oktober 23, 2024

யாழ்.நகரில் ஆட்பிடிப்பு!

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாது முகக்கவசம் அணியாது நின்ற நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.இன்று மாலை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ தலைமையில் யாழ் நகர பகுதியில்  இடம்பெற்ற விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது யாழ். நகர்ப்பகுதியில் முகக்கவசம் அணியாதோர் மற்றும் சுகாதார நடைமுறையினை பின்பற்றாதோர் 30 இற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

யாழ் நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள்,வீதிகளில் இன்று மாலை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ தலைமையில் இடம்பெற்ற விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது யாழ். நகர்ப்பகுதியில் முகக்கவசம் அணியாதோர் மற்றும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாதோர் 30 இற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செலலப்பட்டனர்.