Oktober 23, 2024

விசமிகளால் கிட்டு பூங்கா முகப்புக்கு தீ வைப்பு

யாழ்ப்பாணம்  நல்லூரில் அமைந்துள்ள கிட்டு பூங்காவின் நுழை வாசல் இனம் தெரியாதோரால் தீ மூட்டப்பட்டுள்ளது. இதனால் நுழைவாசலில் அமைந்துள்ள முகப்பு எரிந்து நாசமாகியுள்ளது.இந்தச் சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (28) இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் மாநகர சபையின் தீயணைப்பு படைக்கு அறிவிக்கப்பட்ட போதும் வாகனம் மற்றொரு இடத்தில் சேவையில் ஈடுபட்டு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது.

அதனால் நல்லூர் கிட்டு பூங்காவின் முகப்பு ஏரிந்து நாசமாகியுள்ளது என யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.