Oktober 23, 2024

மாபியா மண் வியாபாரம்:ஒருவர் பலி மூவர் காயம்!

இலங்கை காவல்துறை மற்றும் படைகளது ஆதரவுடன் நடந்தேறிவரும் சட்டவிரோத மணல்  அகழ்வு உயிர்பலிகளை அரங்கேற்றிவருகின்றது.

இன்றைய தினம் கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் இரு குழுக்களிடையே மோதலில்  ஒருவர் பலியாகியுள்ளார்.மேலும் மூவர் படுகாயம் அடைந்துள்ளார். சட்டவிரோத மணல் ஏற்றலில் ஏற்பட்ட முரண்பாடு மரணத்தில் முடிந்தது.