Oktober 23, 2024

மன்னாரை வந்தடைந்த பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான தமிழர் பேரணி

 

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான தமிழர் பேரணி இன்று (6) சனிக்கிழமை காலை வவுனியாவில் இருந்து மன்னார் நோக்கி பயணித்து காலை 12 மணியளவில் மன்னார் மடு சந்தியை வந்தடைந்தது.

பின்னர் மடு சந்தியில் இருந்து ஆரம்பித்த பேரணியானது முருங்கன் ஊடாக மன்னார் நோக்கி சென்றது.

-இதன் போது பிரதான வீதிகளில் உள்ள பொலிஸ் சோதனைச் சாவடிகளில் பொலிஸ் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்ட நிலையில் பல்வேறு தடைகளையும் தாண்டி குறித்த பேரணி மன்னார் பிரதான பாலம் ஊடாக மன்னார் நகர வைந்தடைந்தது.

-மன்னார் பிரதான பாலத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டதோடு,மன்னார் நீதிமன்றத்தின் கட்டளையினையும் பொலிஸார் ஒலி பெருக்கி மூலம் அறியப்படுத்தினர்.

-பேரணியாக வந்த மோட்டார் சைக்களில் மற்றும் வாகனங்களின் இலங்கங்களையும் பொலிஸார் பதிவு செய்த பின்னர் மன்னார் நகர பகுதிக்குள் செல்ல அனுமதித்தனர்.

மன்னார் பிரதான பாலத்தில் இருந்து மன்னார் நகர பகுதியில் உள்ள தந்தை செல்வா சிலையடி வரை குறித்த ஊர்வலம் இடம் பெற்றது.