Oktober 23, 2024

கேதீச்சரமும் போகின்றது?

முல்லைதீவு நீராவியடி பிள்ளையார் ஆலய ஆக்கிரமிப்பினை தொடர்ந்து மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு சொந்தமான காணியை ‚மாதோட்ட‘ விகாரையின் பிக்கு அபகரிக்க முற்பட்டுள்ளார்.

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு சொந்தமான 5 ஏக்கர் காணி சைவ மங்கையர் கழகத்துக்கு 99 வருட குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டதுடன் குறித்த காணியானது நீண்ட காலமாக திருக்கேதீச்சர ஆலயத்தின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளது.

நாட்டில் ஏற்பட்ட இடப்பெயர்வு காரணமாக இராணுவம் அவ்விடத்தில் நிலை கொண்டது. அதன் பின்னர் காணி திருக்கேதீச்சர ஆலயத்திடம் மீளவும் கையளிக்கப்பட்டது.

இந்த நிலையில் அவ்விடத்தில் படையினரால் அமைக்கப்பட்டிருந்த விகாரை ஆலய காணியிலும் தனியார் காணியிலும் ஆக்கிரமித்து அமைந்துள்ளது..

மிகுதி காணி ஆலய நிர்வாகத்தின் பராமரிப்பில் இருந்துவரும் நிலையில் கடந்த தினங்களாக விகாரை பிக்கு மிகுதி காணியை அபகரிக்கும் நடவடிக்கையினை மேற்கொண்டு வந்துள்ளார்.