Oktober 23, 2024

வவுனியா வடக்கில் சிங்கள மக்களுக்குக் காணிகள் வழங்க ஏற்பாடு!!

வவுனியா வடக்கில் 2300 ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டு, கிவுல் ஓயா திட்டம் என்ற பெயரில் குடியேற்றம் செய்யப்பட்ட சிங்கள மக்களுக்கு விவசாய காணிகள் வழங்கப்படவுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன.வரவு-செலவுத்திட்டத்தில் 7ஆயிரம் மில்லியன் ரூபா, நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் 62 அடி உயரத்திற்கு நீரைதேக்கி, நான்கு கிலோ மீற்றர் நீளமான அணைக்கட்டும் அமைக்கப்படவுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.