Oktober 23, 2024

ஊர்காவற்துறையில் கிணற்றில் வீழ்ந்து மாற்றுத்திறனாளி உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பிரதேச செயலர் பிரிவு, புளியங்குளத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தையான மாற்றுத் திறனாளி ஒருவர் இன்று சனிக்கிழமை வெற்றுக் கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் 54 வயதுடைய புளிங்கூடலைச் சேர்ந்த நவரத்தினம் ஜெயசீலன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.