Oktober 23, 2024

துயர் பகிர்தல் இராசேஸ்வரன் சுகந்தி

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின் முக்கிய செயற்பாட்டாளர் திடீர் மரணம்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட திட்ட அமுலாக்கல் பணிப்பாளராக கடமையாற்றி வந்த முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைச்சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயாரான இராசேஸ்வரன் சுகந்தி என்பவரே இவ்வாறு சுகயீனம் காரணாமாக நேற்றைய தினம் சாவடைந்துள்ளார்
இலங்கை அரச படைகளாலும்,துணை இராணுவக்குழுக்கலாலும்,கடத்தப்பட்டு காணால் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி வேண்டி கடந்த 2012 ம் ஆண்டில் இருந்து இன்றுவரை
போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.
நீதியை வேண்டிய போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பல தாய்மார்கள் தந்தையர்கள் சாவடைந்த நிலையில் குறித்த தாயாரும் நேற்றைய தினம் சாவடைந்துள்ளார்
எனினும் இவரின் இழப்பு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பு
22/09/2020