Oktober 22, 2024

முன்மொழியப்பட்ட பெயரில் எந்த மாற்றமும் இல்லை-கட்ச்சிக் கூட்டத்தில் சம்பந்தன்

இலங்கை தமிழரசு கட்சியின் அரசியற்குழுக் கூட்டம் இன்று சனிக்கிழமை 15.08.2020 திருகோணமலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் இல்லத்தில் இடம்பெற்றது.

தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, கட்சியின் செயலாளர் துரைராஜசிங்கம், நிர்வாகச் செயலாளர் குணனாயகம், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான
எம்.ஏ.சுமந்திரன், சி.ஶ்ரீதரன், வடமாகாணசபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் பி.சத்தியலிங்கம், சட்டத்தரணி கே.வி.தவராஜா ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

காலை 11.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட கூட்டம் 2.00 மணிவரை நீடித்தது.

கட்சியின் தேசிய பட்டியல் விடயம் பற்றி நெடுநேரம் பிரஸ்தாபிக்கப்பட்டது.
முன்மொழியப்பட்ட பெயரில் எந்த மாறாறமும் இல்லை என இரா சம்பந்தன் தெரிவித்தார்.

கட்சியின் தேர்தல் வெற்றி கட்சியின் பி