Oktober 22, 2024

பிரஞ்ச்சுக் குடிமக்கள் 6 பேர் சுட்டுக் கொலை!

முன்னாள் பிரஞ்சு காலத்து நாடான மேற்கு ஆபிரிக்காவில் அமைந்துள்ள நைஜர் நாட்டில் பிரஞ்சு தன்னார்வ நிறுவனத்தைச் சேர்ந்த 6 பிரஞ்சுக் குடிமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.நேற்று ஞாயிற்றுக்கிழமை உந்துருளியில் வந்த ஆயுததாரியே இவர்களைக் சுட்டுக்கொன்றுள்ளார்.

ஒட்டகசிவிங்கிக்குப் புகழ் பெற்ற வனவிலங்கு பூங்காவில் இச்சம்பவம் இடம்பெற்றிருந்தது. 6 பிரெஞ்சு உதவித் தொழிலாளர்கள், ஒரு நைஜீரிய வழிகாட்டி மற்றும் ஒரு ஓட்டுநரை ஆயுததாரிகள் சுட்டுக்கொன்றுள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு யாரும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை, ஆனால் பிரான்சும் பிற நாடுகளும் நைஜரின் சில பகுதிகளுக்கு பயணிப்பதை எதிர்த்து மக்களை எச்சரித்தனர். அங்கு போகோ ஹராம் மற்றும் இஸ்லாமிய அரசுடன் இணைந்த போராளி குழுக்கள் இன்னும் செயல்படுகின்றன.

நைஜரில் பிரெஞ்சு நாட்டவர்கள் கொல்லப்பட்டதை இம்மானுவேல் மக்ரோனின் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளார். கொல்லப்பட்டவர்கள் ACTED எனும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் பணியாற்றியவர்களாவர்.