பிரித்தானியாவில் நடைபெற்ற அடிக்கற்கள் எழுச்சி வணக்க நிகழ்வு


அகவணக்கத்தினை தொடர்ந்து மலர்மாலையினை திருமதி நளினி சிவகுமார் அணிவித்ததைத் தொடர்ந்து மலர்வணக்கம், சுடர்வணக்கம் இடம்பெற்றது.
நிகழ்வில் எழுச்சிக் கவிதைகளை, திருமதி துஷ்யந்தினி திலீபன் மற்றும்,திருமதி அன்னலக்சுமி ஜெயபாபு வழங்கினார்கள்.தமிழ் இளையோர் அமைப்பில் இருந்து செல்வி கீர்த்தனா உதயகுமார் அவர்களுடைய ஆங்கில உரை இடம்பெற்றது.எழுச்சி நடனங்களை திருமதி ராகினி ராஜகோபால்,
திருமதி தயாபதி அருளானந்தம்,மற்றும் திருமதி சர்மினி கண்ணன் ஆகிய ஆசிரியர்களின் மாணவிகள் வழங்கினார்கள் . குட்டிக் கண்ணன் இசைக்குழுவின் கலைஞர்கள் வழங்கிய இசை நிகழ்ச்சியில் பாடல்களை சுபேரகன் அனுரா மற்றும் திருமதி தேவிகா அனுரா பாடியிருந்தார்கள். இவ் இசை நிகழ்ச்சிக்கு பின்னணி இசை வழங்கியிருந்தவர்கள் திரு அனுரா மற்றும் துவாரகன் அனுரா .
இன்றைய நாளின் கருத்துரையினை தமிழர் ஒருங்கிணைப்புக் குழு செயற்பாட்டாளர் திரு நியூட்டன் அவர்கள் வழங்கினார்கள் . நம்பிக்கையின் உரமாக ஒலிக்கும் நம்புங்கள் தமிழீழம் என்ற பாடலோடு தேசிய கொடிகள் கையேந்தப் பட்டு,உறுதி மொழியோடு நிகழ்வுகள் நிறைவு பெற்றது.