Mai 19, 2024

மீண்டும் அராஜகம் புரிந்த பொலிஸார்

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, மாளிகை திடலில் பொலிஸாரின் தாக்குதலில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உணவு கொண்டு சென்ற இரு பெண்கள் ஊரடங்கு சட்டத்தை மீறியதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாளிகை திடல் பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று (1) காலை நுழைந்த பருத்தித்துறை பொலிஸார் அங்குள்ளவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்கான மூன்று பெண்கள் மந்திகை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு உணவு எடுத்து சென்ற நிலையிலேயே குறித்த பெண்கள் இருவரும் ஊரடங்கு சட்டத்தை மீறியதாக குற்றம் சாட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.