Mai 3, 2024

தனித்து ஓட்டம் முடிந்தது!

தனித்து ராஜதந்திரிகளை சந்திப்பதும் பேசப்பட்டவை பற்றி வாயே திறக்காத எம்.ஏ.சுமந்திரனின் சூழல் மாறி இலங்கைக்கான ஜேர்மன் தூதரகத்தின் அழைப்பின் பேரில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஜேர்மன் தூதுவர் பெலிக்ஸ் நியூமனை பிரதிநிதிகள் சகிதம் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

சந்திப்பானது அண்மையில் கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராகத் தெரிவுசெய்யப்பட்ட சிறீதரனுக்கு வாழ்த்துத் தெரிவுக்கும் நோக்கில் ஜேர்மன் தூதரகத்தால் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.

சந்திப்பில் அடுத்தகட்ட செயல்நோக்குகள் குறித்து தாம் கரிசனையோடிருப்பதாக  தூதுவர் தெரிவித்திருந்ததாக கூறப்படுகின்றது

இதனிடையே சந்திப்புக்களில் தந்தை செல்வாவின் பேரன் பங்கெடுத்து வருகின்றமை கவனத்தை ஈர்த்துள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert