April 28, 2024

பேரணி மீது நீர்த்தாரை தாக்குதல்!

ஐக்கிய மக்கள் சக்தி நடத்திய பேரணி மீது பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 சஜித் அணியினர் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுத்த நிலையில் விகாரமஹாதேவி பூங்காவிற்கு அருகில் பொலிசாரின் எதிர்ப்பு நடவடிக்கை இடம்பெற்றது.

பேரணியின் போது காயமடைந்த ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும்  ஆர்ப்பாட்டப் பேரணியை கலைப்பதற்காக கொழும்பு பொது நூலகத்துக்கு அருகில் பொலிஸார் நீர் மற்றும் கண்ணீர் புகைப் பிரயோகம் மேற்கொண்டனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert