Mai 6, 2024

இசைஞானி இளையராஜாவின் மகள் இலங்கையில் காலமானார்

இசையமைப்பாளரும் , பின்னணி பாடகியுமான பவதாரிணி இலங்கையில் காலமானார். 

பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின், மகளான பவதாரிணி உடல் நலக்குறைவுக்கு கொழும்பில் ஆயுள்வேத சிகிச்சை பெற்று வந்த நிலையில் , சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார். 

இளையராஜா இசை அமைத்த ராசையா திரைப்படத்தின் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமான பவதாரிணி , பல பாடல்களை பாடியுள்ளதுடன் , தமிழ் . தெலுங்கு இந்தி மற்றும் கன்னட படங்களுக்கு இசையமைத்தும் உள்ளார். 

அதேவேளை நாளை மறுதினம் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை இளையராஜாவின் இசை நிகழ்வுகள் கொழும்பில் நடைபெறவுள்ள நிலையில் , இளையராஜாவின் இசைக்குழு கொழும்பை நேற்றைய வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert