Mai 2, 2024

ரணிலின் ஆட்சி கோட்டாபயவின் ஆட்சியை விட மோசமாக உள்ளது – கஜேந்திரகுமார்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சி கோட்டாபயவின் ஆட்சியை விட மோசமாக உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை (19.01.2024) மாவீரர் தின வாரத்தில் கைதான அரசியல் கைதிகளை பார்வையிட மட்டக்களப்பு சிறைச்சாலைச் பயணம் மேற்கொண்ட போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையில் கூறியுள்ளார்.

ரணிலின் கடைசி கனவு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியாக நியமிக்கப்பட வேண்டும் என்பது, இந்த கனவு நிறைவேறுவதற்கான சாத்தியம் குறைவு.

இவ்வளவு காலமும் தமிழ் தலைவர்களே தமிழர்களை ரணில் நல்லவர் என ஏமாற்றியுள்ளனர்.

ரணில் தேர்தலுக்கு முதல் செய்யும் சேவைகளை விடுத்து பின்னர் செயற்படுத்தவுள்ள விடயங்களையே கூறிவருகிறார்.

இனியும் ரணிலின் நாடகத்தை தமிழ் மக்கள் நம்ப தயார் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert