Mai 3, 2024

யாழில் பிரித்தானிய இளவரசி

இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருக்கும் பிரித்தானிய ஆன் இளவரசி மற்றும் அவரது கணவர் வைஸ் அட்மிரல் சேர் திமோதி லோரன்ஸ் ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கு இன்று வியாழக்கிழமை விஜயம் செய்தார். 

யாழ்ப்பாணம் வருகை தந்த இளவரசி உள்ளிட்ட குழுவினரை வடமாகாண ஆளுநர் வரவேற்றார். தொடர்ந்து யாழ்.பொது நூலகத்திற்கு சென்ற இளவரசி உள்ளிட்டவர்கள்  யாழ்.மாநகர சபை ஆணையாளர் , நூலகர் , நூலக உத்தியோகஸ்தர்கள் உள்ளிட்டவர்களை வரவேற்றனர். 

இதேவேளை குறித்த நிகழ்வுக்கு செய்தி சேகரிப்புக்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணத்தை தளமாக கொண்டு இயங்கும் வலையொளி அலைவரிசை (YouTube Channel) வைத்திருபோர் உள்ளிட்ட நால்வருக்கு அனுமதி வழங்கப்பட்டது. 

குறித்த விடயம் ஊடகவியலாளர்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தி இருந்தது. 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert