Mai 17, 2024

இராணுவ அதிகாரிகளிற்கு கதிரைகள்?

 முன்னாள் தளபதிகள் மூவருக்கு உயர்மட்ட இராஜதந்திர பதவிகளை வழங்க நாடாளுமன்றத்தின் உயர் பதவிகள் குழுவினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளுக்கான உயர்ஸ்தானிகர் பதவியே இவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

அதன்படி ஓய்வுபெற்ற படைத் தளபதிகளான ரவீந்திர சந்திரசிறி விஜேகுணரத்ன, தமித் நிஷாந்த சிறிசோம உலுகேதென்ன மற்றும் சுதர்சன் கரகொட பத்திரன ஆகிய அதிகாரிகளுக்கே இந்த உயரிய பதவி வழங்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு முறையே, பாகிஸ்தானுக்கான புதிய உயர்ஸ்தானிகர், கியூபாவுக்கான புதிய தூதுவர் மற்றும் நேபாளத்துக்கான புதிய தூதுவர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

பல நாடுகளுக்கான இராஜதந்திரிகளை இலங்கை அரசாங்கம் மாற்றிவருகின்ற பின்புலத்திலேயே இந்த மூன்று நியமனங்களும் வழங்கப்படவுள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert