Mai 20, 2024

யாழ். வைத்தியசாலைகளில் புதன் மற்றும் வியாழன் ஆகிய இரு தினங்கள் போராட்டம்

யாழ்.மாவட்ட வைத்தியசாலைகளில் நாளை மறுதினம் புதன்கிழமை மற்றும் மறுநாள் வியாழக்கிழமை ஆகிய இரு தினங்களும் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் யாழ். மாவட்ட இணைப்பாளர் வி. தர்சன் அறிவித்துள்ளார். 

மருந்து தட்டுப்பாடு , வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது சுகாதார கட்டமைப்பை பாதிக்கும். அதனை தடுக்க அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியே இரு தினங்கள் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக தெரிவித்தார். 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert