Mai 11, 2024

ஊழல் எதிர்ப்புச் சட்டமூலத்துக்கு முழுமையான ஆதரவு

ஊழல் எதிர்ப்புச் சட்டமூலத்துக்கு முழுமையான ஆதரவு வழங்கப்படும் என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.

சட்டத்தை நிறைவேற்றுவதுடன் நின்றுவிடாமல் அதனை செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார வலியுறுத்தினார்.

அத்துடன், எதிர்க்கட்சியை பிளவுபடுத்தும் நோக்கிலேயே ஆளுங்கட்சியால், கட்சி தாவல் குறித்து கதை பரப்பட்டுவருகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert