April 27, 2024

விடுதலைப் புலிகளின் சயனட்,இலக்கத்தகடு உள்ளடங்கலாக மனித எச்சங்கள் இன்று மீட்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடையார்கட்டு குரவில் கிராமத்தில் தனியார் காணி ஒன்றின் இனம் காணப்பட்ட மனித எச்சங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன!

புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட உடையார் கட்டு குரவில் கிராமத்தில் தனியார் ஒருவரின் காணியை பண்படுத்தும் போது கடந்த 20.11.22 அன்று மனித எச்சங்கள் இனம் காணப்பட்டுள்ளன

இது குறித்து புதுக்குடியிருப்பு காவல் நிலையத்தின் நீதிமன்றத்தில் பதிவுசெய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய இன்று தோண்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் சட்டவைத்திய அதிகாரி றொகான் தடையவியல் பொலிசார்,,பொலிசார் ஆகியோர்  தோண்டப்பட்டுள்ளது.

இதன்போது மூன்று வகையான மனித எச்சங்களின் மாதிரிகள் மீட்கப்பட்டுள்ளன சட்டவைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

மனித எச்சங்களுடன் துப்பாக்கி இரவைகள் மற்றும் உடைகள், என்பன காணப்பட்டுள்ளன

மீட்கப்பட்ட மனித எச்சங்களை சட்டவைத்திய அதிகாரி மரபணுசரிசோதனையின் பின்னர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதிபதி பணித்துள்ளார்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert