Mai 2, 2024

ஈழத்தமிழ் ஏதிலிகளை நாடுகடத்தும் யேர்மனிய அரசின் நடவடிக்கைக்கு எதிராக இறுதிவரை போராடிக்கொண்டிருக்கும் தமிழீழமக்கள்.

யேர்மனிய அரசினால் கைதுசெய்யப்பட்டு நாடுகடத்தயிருக்கும் ஈழத்தமிழ் ஏதிலிகளை இன்று இரவு 21.00 மணிக்கு டுசில்டோர்ப் விமானநிலையமூடாக நாடுகடத்தவுள்ளனர். இத்தருணத்தில் யேர்மனி டுசில்டோர்ப் விமானநிலையத்தில் அங்குள்ள மனிதேநேய அமைப்புக்களும் சில கட்சிகளும் அங்கு வாழும் தமிழீழ மக்களும் இணைந்து விமான நிலையத்திற்குள் தங்கள் அறவளிப் போராட்டத்தை நடத்தியவண்ணம் உள்ளனர்.

 

தற்போது கிடைத்த செய்தி.
யேர்மனி போட்சைம் நகரில் அமைந்துள்ள சிறச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்தவர்களில் நால்வர் விடுதலைசெய்யப்பட்டுள்ளனர்.