April 26, 2024

பிரான்சில் மீண்டும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததற்கு இது தான் காரணம்…!

பிரான்சில் மீண்டும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததற்கு இது தான் காரணம்...!

பிரான்ஸ் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 24 மணி நேரத்திற்குள் ஏழு அதிகரித்து மொத்த எண்ணிக்கை 17,185 ஆக உயர்ந்துள்ளது.

ஏப்ரல் 15ம் திகதியிலிருந்து முதல் அதிகரிப்பு இது என்று பிரான்ஸ் சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

வியாழக்கிழமை தொடங்கிய பொது விடுமுறை வார இறுதி காரணமாக வழக்கு எண்ணிக்கை பதிவு செய்வதில் ஏற்பட்ட தாமதம் தான் இந்த அதிகரிப்புக்கு காரணம் என்று பிரான்ஸ் சுகாதார நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் விளக்கமளித்துள்ளார்.

செய்தித் தொடர்பாளரின் கூற்றுப்படி, விடுமுறை வார இறுதியில் நாடு முழுவதும் சில மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட வழக்குகள் நீடிக்க வழிவகுத்திருக்கக்கூடும்.

இதற்கிடையில், ஐ.சி.யுவில் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதாக சுகாதரா நிறுவனத்தின் தரவு காட்டுகிறது, மொத்தம் 1,655 பேர் இப்போது நாட்டில் தீவிர சிகிச்சையில் உள்ளனர். சனிக்கிழமை முதல் 10 குறைந்துள்ளது.