Mai 12, 2025

இலங்கை:தேர்தலிற்கு தயாராகிறது!

இலங்கையில் தேர்தல் ஒன்றிற்கான தேவை எந்நேரமும் எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அனைத்து கட்சிகளின் செயலாளர்களையும் எதிர்வரும் 06ஆம் திகதி முன்னிலையாகுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

2022 வாக்காளர் பட்டியல் மற்றும் தற்போதைய அரசியல் நெருக்கடி குறித்து கட்சிகளுடன் ஆலோசனை நடத்தவும் தமது நிலைப்பாட்டை தெரிவிக்கவும் இந்த கலந்துரையாடலை நடத்தவுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

2022ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலை எதிர்வரும் ஒக்டோபர் 31ஆம் திகதிக்குள் சான்றுப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert