März 28, 2025

கப்பல் கேட்கிறார் ஸ்ராலின்!

தமிழீழ தமிழருக்கு உணவுகளை அனுப்ப கப்பல் வசதி கோரியுள்ளார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்.

உரிய கப்பல் வசதி செய்துதர வேண்டும் என இந்திய வெளியுறவு அமைச்சருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்   ஜெய்சங்கருக்கு  கடிதம் எழுதியுள்ளார். அதில் . கடந்த மார்ச் 31-ம் தேதி பிரதமரை சந்தித்தபோது இலங்கை தமிழர்களுக்கு நிவாரணம் வழங்க தமிழ்நாடு அரசு தயாராக உள்ளதாக தெரிவித்திருந்தேன். 

தூத்துக்குடியில் இருந்து காய்கறி, மருந்துகளை கொழும்புவுக்கு அனுப்ப தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது. இலங்கை தமிழர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை அனுப்ப உரிய வசதி செய்துதர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert