März 28, 2025

லண்டனில் நடந்த பதற வைக்கும் சம்பவம்! பெற்ற மகளை குத்திக் கொலை செய்த இலங்கைத் தாய்..

லண்டனில் மிட்சாமில் இலங்கையைச் சேர்ந்த தாய் ஒருவர் தன் மகளை கத்தியால் குத்தி விட்டு தன்னையும் கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயற்சி செய்துகொண்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Mitcham-ல் உள்ள Monarch Parade-ல் நேற்று உள்ளூர் நேரப்படி சரியாக 4 மணிக்கு இரண்டு பேர் காயங்களுடன் கிடப்பதாக மெட்ரோ பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருவரையும் ஏர் அம்பூலன்ஸ் மூலம் மருத்துவர்கள் வைத்தியசாலை எடுத்துச் சென்றுள்ள நிலையில் அந்த பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து கணவன் கூறுகையில், மனைவியே இவ்வாறு தனது பிள்ளையைக் கத்தியால் குத்தியுள்ளார் என்றும் மன அழுத்தமே இதற்கு காரணம் என்றும் தெரிவித்திருக்கிறார்.

இருப்பினும் பிள்ளை இறந்து விட்டதாகவும். தாய் உயிருக்கு போராடிக்கொண்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

லண்டனில் பல தமிழர்கள் மன அழுத்தத்தில் உள்ளார்கள். ஆனால் இதனை வெளியே சொல்ல எவரும் தயாரா இல்லை அண்மையிலும் மன அழுத்தத்தினால் ஒரு கொலை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது…

பொலிசார் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளதாகவும், இந்த சம்பவம் தொடர்பாக யாரையும் தேடவில்லை, யாரையும் கைது செய்யவில்லை.

குழந்தையின் மரணம் மற்றும் பெண்ணின் காயங்கள் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.