März 28, 2025

சற்று முன்னர் ஜேர்மனியில் ஒரு முழுக் கிராமமே லாக்-டவுன் – 1,500 பேருக்கு கொரோனா

3 லட்சத்தி 60,000 ஆயிரம் பேர் வசிக்கும் ஒரு கிராமத்தை, அப்படியே லாக் லடவுன் செய்ய ஜேர்மன் அதிபர் முடிவுசெய்துள்ளார் என்ற தகவல் சற்று முன் வெளியாகியுள்ளது. Guetersloh என்னும் கிராமமே இவ்வாறு லாக் டவுன் செய்யப்படுகிறது. குறித்த கிராமத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் இருந்து, கொரோனா பரவ ஆரம்பித்து. அதில் வேலை பார்த்த 1,500 பேருக்கு பரவியுள்ளது.

இன் நிலையில் கொரோனா தொற்று வேறு கிராமங்களுக்கும் பரவாமல் இருக்கவே ஜேர்மன் அதிபர் அஞ்சலா மேர்கிள் இந்த அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார் என அதிர்வு இணையம் அறிகிறது.