September 19, 2024

விரும்பியவர்க்கு வாக்களிக்கலாம்:தமிழரசு முடிவு?

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் தமது விருப்பின் அடிப்படையில் வாக்களிக்கலாமென இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு அறிவிக்கவுள்ளது.

முன்னதாக தமிழரசு மத்திய செயற்குழுக்கூட்டம் அண்மையில் இரண்டு தடவைகள் நடைபெற்ற போதும், ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்த இறுதித் தீர்மானம் இதுவரை எடுக்கப்படவில்லை.

இவ்வாறான நிலையில், எதிர்வரும் நாட்களில் அதன் மத்திய செயற்குழு கூட்டம் மீண்டும் கூட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன் போது, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான ‚ஆரம்பக்கட்ட தீர்மானம் ‚ ஒன்றை எடுத்து அறிவிப்பது தொடர்பாக இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆராயவுள்ளதாக தெரியவந்துள்ளது.

அடுத்த மாதம் முதல்வாரத்தில் அஞ்சல் மூல வாக்களிப்புகள் இடம்பெறவுள்ள நிலையில், இலங்கைத் தமிழரசு கட்சி தமது தீர்மானத்தை அதற்கு முன்னர் அறிவிப்பதே உசிதமானது என கூறப்படுகின்றது.

இந்நிலையில் விருப்பின் அடிப்படையில் வாக்களிக்கலாமென்ற ஆரம்பக்கட்ட தீர்மானம் ஒன்றையேனும் எடுக்கும் பொருட்டு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தைக் கூட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert