September 19, 2024

முல்லையில் பொதுவேட்பாளர் பிரச்சாரமும் புதைகுழி போராட்டமும்!

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனின் முதலாவது தேர்தல் பிரசார கூட்டம் முல்லைத்தீவு மண்ணில் ஆரம்பிக்கப்பட்டது.

முன்னதாக முள்ளிவாய்க்கால் மண்ணுக்கு சென்ற தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தி அதன்பின்னர் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்டார்.

இதனிடையே எதிர்வரும் 20 ஆம் திகதி கொக்குத்தொடுவாய் புதைகுழிக்கு முன்பாக போராட்டமொன்று இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத் தலைவி மரியசுரேஸ் ஈஸ்வரி போராட்டம் தொடர்பிலான அறிவிப்பை விடுத்துள்ளார்.

கொக்குத்தொடுவாய் உள்ளிட்ட மனித புதைகுழிகளிற்;கு நீதி கோரி காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக மரியசுரேஸ் ஈஸ்வரி தெரிவித்துள்ளார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert