September 19, 2024

நல்லூர் தீர்த்த திருவிழா

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ தீர்த்த திருவிழா இன்றைய தினம் திங்கட்கிழமை காலை நடைபெற்றது. 

காலை ஆரம்பமான விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து, காலை 7 மணிக்கு தீர்த்தோற்சவம் நடைபெற்றது.

இன்றைய தீர்த்த திருவிழாவின் போது நாட்டின் பல பாகங்களில் இருந்தும் , வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டிருந்தனர். 

அதேவேளை ஆயிரக்கணக்கான அடியவர்கள் அங்க பிரதட்சணம் செய்தும் , நூறுக்கணக்கானவர்கள் காவடிகள் எடுத்தும் கற்பூர சட்டிகள் ஏந்தியும் முருக பெருமானை வழிபட்டனர் . 

இன்றைய தினம், மாலை 5 மணிக்கு கொடியிறக்கம் நடைபெறவுள்ளதுடன் நாளை செவ்வாய்க்கிழமை மாலை திருக்கல்யாண உற்சவம் நடைபெறும்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert