Mai 3, 2024

வெங்காயம்:சீனாவிடம் சரண்!

 இலங்கையில் சாதாரண மக்களிடையே அன்றாடம் ஆட்டிப்படைத்துவரும் வெங்காயப்பிரச்சினையில் இந்தியா கைவிட்டுள்ள நிலையில் அரசு சீனாவிடம்  கையேந்தியுள்ளது.

சீனாவிடம் முன்பதிவு செய்யப்பட்ட பெரிய வெங்காயம் இன்னும் ஐந்து நாட்களில் நாட்டிற்கு கிடைக்கப்பெறுமென வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

வெங்காயம் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டதும் உள்நாட்டு சந்தையில் வெங்காயத்தின் விலை குறைவடையுமென வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு மேலதிகமாக பெரிய வெங்காயத்திற்கு பதிலாக இளஞ்சிவப்பு வெங்காயத்தை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே இலங்கையில் வெங்காயத்தின் விலை மூன்று மடங்காக அதிகரித்துள்ள நிலையில்  இளஞ்சிவப்பு வெங்காய இறக்குமதிக்கு அறவிடப்படும் 70 ரூபா வரி 10 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert