Mai 8, 2024

பரீட்சை வினாத்தாளில் „ஒரு நாடு இரு தேசம்“ என்ற வினாவால் சர்ச்சை

வடமாகாண கல்வி திணைக்களத்தால் , 11ஆம் ஆண்டு மாணவர்களுக்கு நடத்தப்பட்ட மூன்றாம் தவணை தமிழ் மொழியும் இலக்கியமும் பரீட்சையில் , கேட்கப்பட்ட கேள்வி ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

„ஒரு நாடு இரு தேசம்“ என தமிழர்கள் முழங்கினர். இவ்வாக்கியம் என்ன வாக்கியம் என்ற கேள்வியே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

குறித்த வினாத்தாள் சமூக வலைத்தளங்களில் பரவி வருவதுடன் , அது தொடர்பிலான விமர்சனங்களும் எழுந்துள்ளன. 

இதேவேளை குறித்த கேள்வி தொடர்பில் , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் அறிய முடிகிறது.

„ஒரு நாடு இரு தேசம்“ எனும் சொல் தமிழ் அரசியல் கட்சி ஒன்று தமது கொள்கையாக கொண்டுள்ள நிலையில் அது தொடர்பிலான வினாத்தாளில் வந்தமையே சர்ச்சைக்கு காரணமாகும்.  

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert