Mai 2, 2024

சிறீதரன் -சுமந்திரன் மோதலில்லையாம்!

இலங்கைத் தமிழரசு கட்சிக்கான தலைமைத்துவ உள்ளக தேர்தல் எதிர்வரும் ஜனவரி 21 ஆம் தேதி நடைபெற உள்ளது.இந்நிலையில் கட்சிக்குள் போட்டியிடுகின்ற எம்.ஏ.சுமந்திரன் மற்றும் யோகேஸ்வரன் ஆகியோரை பற்றிய தவறான பதிவுகளை அல்லது பின்னூட்டங்களையோ அன்றி விவாதங்களையோ சமூக வலைத்தளங்களிலும்  பொது வெளிகளிலும் மேற்கொள்ளக்கூடாது என தலைமைக்கு போட்டியிடுகின்ற சி.சிறீதரன் அறிவித்துள்ளார்.

இன்று மாவட்டத்தின் சகல கட்சி அங்கத்தவர்களுக்கும் இறுக்கமான பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எக்காரணம் கொண்டும் உள்ளக தேர்தலில் போட்டியிடுகின்ற கட்சியினுடைய உறுப்பினர்கள் மீது  எதிராகவோ அன்றி வஞ்சனை தீர்க்கும் வகையிலோ குரோதத்தை ஏற்படுத்தும் வகையிலான கருத்துகளோ அன்றி விவாதத்தை தூண்டும் வகையிலான கருத்துகளோ பதிவிடக்கூடாது என்று அங்கத்தவர்கள் அனைவரும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

சிறீதரனிற்கு போட்டியாளராக அடையாளப்படுத்தப்பட்டுள்ள சுமந்திரனை இலக்கு வைத்து சிறீதரன் ஆதரவாளர்கள் முகநூல்கள் வழியே கடுமையான பிரச்சாரங்களை முன்னெடுக்கின்றனர்.

மறுபுறம் சுமந்திரனிற்கு போட்டியாளராக அடையாளப்படுத்தப்பட்டுள்ள சிறீதரனை இலக்கு வைத்து சுமந்திரன் ஆதரவாளர்கள் முகநூல்கள் வழியே கடுமையான பிரச்சாரங்களை முன்னெடுக்கின்றனர்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert