Mai 17, 2024

சுமந்திரன் ஓய்வுபெறுகிறார்!

எதிர்வரும் ஜனவரி 21 ஆம் திகதி பொதுச் சபை கூடி தமிழரசுக்கட்சியின் தலைவர் மற்றும் நிர்வாகிகளை தெரிவு செய்யவுள்ள நிலையில் ஜந்து வருடங்களில் தான் ஓய்வு பெறவுள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். “எனக்கு  இன்னும் இரண்டு மாதங்களில் 60 வயதாகிறது  65-ல் நான் ஓய்வு பெறுவேன் என கட்சி ஆதரவாளர்களிடையே எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசு கட்சியின் தேசிய மாநாடு திருகோணமலையில் திட்டமிட்டபடி இடம் பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் 17 ஆவது தேசிய மாநாடு ஜனவரி மாதம் 27, 28 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளதாகவும் அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளதாகவும் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் திருகோணமலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்றது.

கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான, எம்.ஏ. சுமந்திரன், சாணக்கியன், சிறீதரன், மற்றும் மாவை சேனாதிராஜா, தவராசா கலையரன், சீ.விகே சிவஞானம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது, கட்சியின் 17 ஆவது தேசிய மாநாடு குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் எதிர்வரும் 21 ஆம் திகதி பொதுச் சபை கூடி தலைவர் மற்றும் நிர்வாகிகளை தெரிவு செய்ய உள்ளதாகவும், 26 ஆம் திகதி மத்திய செயற்குழு கூட உள்ளதாகவும் 27ம் திகதி பொதுக்கூட்டம் இடம்பெற உள்ளதுடன் 28 ஆம் திகதி இலங்கை தமிழரசு கட்சியின் 17 வது தேசிய மாநாடு இடம் பெற உள்ளதாகவும் எம்,ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert